Tabs

மரமும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்

No comments:

Post a Comment

சோழவந்தான்