Results (முடிவு)

ரயில் முன்பதிவு (Rail Reservation )

Bus Ticket Booking



                                          http://www.tnstc.in/







தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)

EB Bill Online Payment

EB Bill Status

TNEB BILL STATUS/BILL DUE
Choose Region :
Service Number:    

 
Proceed


மேலும் தகவல் http://www.tneb.in/



https://www.tnebnet.org/awp/login


வாக்காளர் பட்டியல்



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த இணையளம் மூலமாகவும் சரிபார்த்து கொள்ளலாம்



தமிழ்நாடு அரசு
தேர்தல் துறை
1. உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உங்கள் சட்டமன்றத் தொகுதியினை தேர்வு செய்க  
 வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடவும்
 வாக்காளர் பெயர் மூலமாக தேடவும்
 வாக்குச்சாவடி , தெரு பெயர் மூலமாக தேடவும்
 தெரு பெயர் மூலமாக தேடவும்
                                Click here

       தமிழ்நாடு அரசு தேர்தல் துறை

யானை (Elephants)




யானைகள் பற்றிய தகவல்

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.






11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் தகவல் தொடர்பு பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்

பார்த்ததில் பிடித்தவை













தெரிந்து கொள்வோம்


வைரமுத்து





காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களின் தொன்மை





காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர் . அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார். கார்த்திகேயன் ஈரோட்டில் காங்கேயம் காளைகள் வளர்க்கும் பண்ணையை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது

மேலும் வரலாற்று ரீதியான தகவல் அவர் நமக்கு தருகையில்..
இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது . இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும் .

சொர்கமே என்றாலும் அது சோழவந்தான் போல வருமா?
















வாடிப்பட்டி

Vadipatti


                     இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.


வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன



அணு உலை - ஏன் எதற்கு எப்படி?

அணு உலையில் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்காத கேள்வி ஒன்னு இருக்கு. அது  அணு உலை எல்லாம் சரியாத்தான் கட்டியிருக்கு என சொல்றீங்க. பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் வராத இடத்தில் கட்டியிருக்கு என சொல்றீங்க.  ஆனா யாராச்சும் அந்த இடத்துல குண்டு வச்சுட்டா? அணு உலைக்கு வைக்கலீன்னாலும் அதோட கண்ட்ரோல் ரூம்முக்கு வச்சுட்டா என்ன செய்ய? குண்டு கூட வேணாம் போர் வந்து மேலேருந்து குண்டு வீசினா என்ன செய்ய? இல்லாட்டி 9/11 தாக்குதல் மாதிரி விமானத்தோடு மோதினா?  ஆபத்து தானே? (எப்படி எல்லாம் எதிர் தரப்புக்கு எடுத்து சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்குது  :-))))) )  சரியான கேள்வியே. இதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.  மிக எளிமையான தீர்வே. மொத்த அணு உலையும் ஒரு பெரிய காங்கிரீட் கட்டிடத்திற்குள் இருக்கும். வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது, உள்ளே இருந்தும் எதுவும் வெளியே வராது. என்ன குண்டு போட்டாலும் எதுவும் ஆகாது.  இதை செர்னோபில் போன்ற விபத்துக்களுக்கு அப்புறம் கத்துக்கிட்டாங்க. இப்பவும் புகுஷிமாவில் அணு உலை பார்க்கமுடியும். ஆனால் கூடங்குளத்திலோ மற்ற இந்திய அணு உலைகளிலோ பார்க்கமுடியாது. நமக்கு தெரிவது இந்த காங்கரீட் கட்டிடமே. இதனுள் இருக்கும்போது வெடித்தாலும் பாதிப்பு வெளியே வராது.   அடுத்து கழிவு நீர்  அணு உலையில் இருந்து வெளியேறும் நீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு என இங்கு பலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள்  ஆனால் அணு உலையின் வடிவமைப்பை பார்த்தாலே இது நடக்க முடியாத ஒன்று என புரியும். அணு உலையின் குளிர்விக்கும் நீர் பாய்லர்களில் எப்படி பயன்படுகிறதோ, நிலக்கரி கொண்டு செயல்படும் அனல் மின்நிலையத்தில் எப்படி பயன்படுகிறதோ அப்படி மட்டுமே பயன்படும். ஆனால் இது ஏன் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.  இது புரிதலில் இருக்கும் பிரச்சினை.  அணு உலையை அனல் மின்சாரம் போல் நினைத்து  நிலக்கரி = யுரேனியம் ஆக்சிஜன் = யுரேனியம்  என்று நினைத்துக்கொள்வதால் வரும் பிரச்சினை. ஆனால் அணு உலையில் மின்சாரம் எடுக்க ஆக்சிஜன்/காற்று தேவையில்லை என தெரிந்தால் இது புரியும். ஆனால் இதிலே இன்னோன்றும் இருக்கிறது.  சென்னையின் கூவத்தை கடலில் விட்டுவிட்டு அதனால் குறையும் மீன் வளத்திற்கு கல்பாக்கத்தை காரணமாக சொல்வது. நாம் பயன்படுத்தும் சோப்பு, கிருமிநாசினிகள் என பலவும் கூவம் வழியாக கடலுக்கே செல்கினறன. அதனால் விளையும் அபாயங்கள் பல. ஆனால் இதை வசதியாக மறைந்துவிட்டு அணு உலையின் மீது பழிபோடுவது எளிதான செயல் என்பதால் இது நடக்கிறது.   இதிலே இன்னோன்றும் உண்டு. வெப்பம் அதிகமாக இருந்தால் குறைத்துக்கொள்ளலாம். அது எவ்வளவு என்பதை ஆய்வாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

தமிழ்ப்பெண்களே! பாடிக்கிட்டே சமையல் பண்ணுங்க!



நான் நன்றாக சமையல் செய்வேன்.(நெஜமாத்தாங்க).செட்டிநாட்டு சமையல், செட்டிநாட்டு பலகார வகைகள்,சில பல குறிப்புகளைப் படித்துசோதனை முயற்சிகள் செய்வது, சரியாக வந்தால் அந்தப்பெயர்,அல்லாவிடில் நாமே ஒரு நாமகரணம் சூட்டுவது இதில் நான் கை தேர்ந்தவள்.தீபாவளி சமையங்களில் பலகாரம் செய்யத் தெரியாத, செய்ய இயலாத தோழியர்க்கு செய்து கொடுப்பதுண்டு.அந்த நேரங்களில் தொலைபேசி அழைப்பு வந்தாலே பலகாரப் பக்குவம் கேட்பதற்காகத்தான் இருக்கும்.எனக்கு பாட்டு மிகவும் பிடித்தது.நாட்டுப்புறப்பாட்டு,பழைய திரை இசை,புதிய பாடல்களில்,மென்மையான இசையுடன் கூடிய பாடல்கள்,எம்.எஸ்.அம்மா,சுதா ரகுநாதன் அவர்களின் பாடல்கள் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.(சமையலச்சொல்லிட்டு பாட்டுக்கு வந்துட்டீங்க என்கிறீர்களா? இருங்க வர்றேன்) நான் சமையல் செய்யும் போது பாட்டுப் பாடிக்கொண்டே தான் சமையல் செய்வேன்.இஸ்க் பராரரா என்று ஆரம்பித்தால் என் மகன்,'அம்மா இது என் பாட்டு.உங்களுக்கு வேற பாட்டுக்கெடைக்கலியா.நீங்க இந்தப்பாட்ட கொல பண்றீங்க.அப்றம் எனக்கு புடிக்காம போய்டுது' என்று கூற,' பார்த்த முதல் நாளே!' என்று ஆரம்பித்தால் என் மகள்,'ம்.ம்.. நாந்தான் கிடச்சன் உங்களுக்கு.' என்பாள்.இந்தி மொழிப் பாடல் பாடினால் என் கணவர்,' எப்பவும் நீ ஹிந்திப்பாட்டு பாடுறப்ப கொஞ்சம் அடக்கியே வாசி.தமிழத் தப்புதப்பா பேசுனா நமக்கு எவ்ள கோவம் வருது.அப்டித்தான் அவுங்களுக்கும்' என்பார்.இது எதுக்கு வம்பு.நான் டி.எம்.சௌந்தர்ராஜன்,பி.சுசீலா பாடிய பாடல்கள்,நாட்டுப்புறப்பாடல்களை சுழலவிட்டு நானும் கூடவே பாடியபடி சமையல் செய்வேன்.இது நான் என் அம்மா வீட்டில் வேலை செய்யவென்று ஆரம்பித்த சிறு வயது முதலே உள்ள பழக்கம்.யாராவது நண்பர்கள்,தோழிகள் வீட்டுக்கு வந்தால், 'என்ன பாட்டுச்சத்தம்? அமர்க்களப்படுது' என்பார்கள். என் கணவரும், குழந்தைகளும், ஆமா! அவுங்க சமைக்குறப்ப பாடிக்கிட்டே சமைப்பாங்க.நாங்க(ருசி தெரியாதிருக்க)  சாப்பிடுறப்ப பாடிக்கிட்டே சாப்புடுவோம்' என்பார்கள்.

             இதைவிட என் மகனின் பள்ளித்தோழர்கள் அவனின் மதிய உணவைப்பகிர்ந்து கொண்டுவிட்டு 'நீ குடுத்து வச்சவண்டா. ஆன்டி,இவ்ள அருமையா சமைக்கிறாங்க' என்பார்களாம்.வீட்டுக்கு வரும் அவனின் தோழர்கள்,'ஆன்டி,நீங்க கேட்டரிங் படிச்சீங்களா? நீங்க வைக்கிற இட்லி சாம்பார் சூப்பர்' என்றால் என் மகன் உடனே 'உளறாத.ஒரு நாள்ல இப்டிலாம் முடிவு பண்ணிராத' என்பான்.'ஆமாண்டா! அப்புடி கிடந்துதான் 15 வயசுலய ஆறடி உயரம் இருக்க' என்பேன் நான்.அதற்கு அவன்  'பதினெட்டு வருஷம் ஒரு நாளுல்ல ரெண்டு நாளுல்ல பதினெட்டு வருஷம் அப்பா உங்க சமையல சாப்டுட்டு அப்டியே தான் இருக்காங்க' என்பான்.அவரோட இளமையின் ரகசியமே என்னோட சமையல் தான்டா! என்பேன்.  ஒரு நாள் எதேச்சையாக ஒரு பெண்கள் பத்திரிக்கையில் ஒரு சகோதரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்."அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். சுத்தம்,சுகாதாரம் ஒரு காரணம்.அதோடு சமைப்பவர்களின் மனநிலை அந்த உணவில் படிவதால்(கோபம்,அவசரம்,பரபரப்பு) அந்த உணவை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண்,  அதே கோபம், கடுகடுப்பு,அஜீரணக்கோளாறு இன்னபிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. ஒரு அரண்மனையில் விருந்துக்கு வந்த துறவி திருட்டு சமையற்காரன் சமைத்த உணவை உண்டதும் அரசரின் செங்கோலைத் திருடிக்கொண்டு போய்விட்டாராம். பிறகு துறவி விசயத்தை உணர்ந்து அரசரிடம் சொல்லி செங்கோலைத் திருப்பிக்கொடுத்தாராம்.அதனால் நாம் சமைக்கும் போது ஸ்லோகங்கள்,பஜனைப்பாடல்கள்,பிடித்த திரை இசையை பாடிக் கொண்டே சமைத்தால் நம் மனம் இலகுவாகி உணவை உண்பவர்களுக்கு உற்சாகமான மன நிலையும் நோயற்ற வாழ்வும் அமையும்" என்று.

          இந்தக்கட்டுரையின் சாரத்தை நான் வானொலியில் பெண்கள் நிகழ்ச்சியில் கூறுவதுண்டு.ஏனென்றால் இங்கு சிலர் குழாயில் தண்ணீர் வரவில்லையா, சமையல் வாயு தீர்ந்து விட்டதா? உடல் சுகமில்லையா? குழந்தைகளுக்கு உடல் நலமில்லையா? வெளியில் எங்காவது போக வேண்டுமா? எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு உணவகங்களில் வாங்கி உண்பது.இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம்.ருசிக்காக அவர்கள் செய்யும் கலப்படங்கள்,அஜினோ மோட்டோ,சோடா போன்ற பொருட்களும் உடல் நலத்திற்குக் கெடுதல் தான்.என்னம்மா? தோழியரே! இனிமேல் நீங்களும் பாடிக்கொண்டே சமையல் செய்வீர்களா? எங்கள் சகோதரர்கள் உங்கள் சமையலில் ஏதாவது குறை சொன்னால் அவர்களைப் பாடிக் கொண்டே சாப்பிடச்சொல்லுங்கள். நாளைக்கு நன்றாக சமைக்கிறேன் என்று உறுதி கொடுங்கள்.நாளைக்கும் அப்படியே ஆகிவிட்டால் என்கிறீர்களா? நாளை தினமும் தான் வந்து கொண்டே இருக்கிறதே..

படித்ததில் பிடித்தது


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்   தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்   வாழ்நாளே இழப்பு.
   10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
   11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12.  எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
   13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
   14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
   15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
    16.  யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
   17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
   18.   பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
   19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
   20.  உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
   21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
   22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
   23.  தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
   24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
   25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
  26.  அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
   27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
   28.  தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
   29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
   30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
   31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
   32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
   33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
34.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.–லியோ டால்ஸ்டாய்
`
35.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.– கண்ணதாசன்
`
36.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
37.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.–சுகி செல்வம்
`
38.நேற்று,இன்று,நாளை ;
இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் – ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்…. ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் — ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.
`
39.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.
------------------------------------------------------



உதிரும் மலருக்கு ஒரு நாள்தான் மரணம்.
பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்.
உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை நேசியுங்கள்.
அன்பை சுவாசியுங்கள்


______________________________________________________________________


உனைத்தான் நினைத்தேன் உயிராய்.
எனைத்தான் கொடுத்தேன் விலையாய்
உன்னை சுற்றும் என் உலகம் இங்கே.
என்னை ஈர்க்கும் விசையாயை நீதான் அங்கே.
காலம் முழுதும் உன் காதல் போதும்.
இந்த பிறவி ஒன்றே போதும்.


___________________________________________________________________


தாயின் பாசம்
  
       காரணம் இல்லாமல்
கலைந்து போக இது கனவும் இல்லை.
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் இல்லை.
நம் உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான தாயின் பாசம்.....இது


_________________________________________________________________