சோலார் Solar



ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது என்ற அடிப்படை பௌதிக தத்துவமும் ஐன்ஸ்டீனின் ஒளி மின் விளைவு விதியையும் ஒரு புள்ளியில் இணைக்கும் போது தான் சோலார் பேனல்கள் உருவெடுத்தது.


சோலார் பேனல்களில் பெரும்பாலும் சிலிகான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
100 நானோ மீட்டருக்கும் குறைவான அலைநீளமுள்ள சூரிய ஒளி அலைகள் இதன் தளத்தில் படும்போது அதனிடத்தில் உள்ள ஒரு எலக்ட்ரான் கிளர்வுறுகிறது. அது வெப்பத்தை உமிழந்து செயலிழந்து விழும்போது சிலகுறிப்பிட்ட ஜங்க்ஷனில் விழச்செய்யப்படுகின்றன. அப்போது அவை மீண்டும் கிளர்வுறுகின்றன அல்லது உறிஞ்சப்படுகின்றன. இவ்வாறாக எலக்ட்ரான்கள் துண்டப்பட்டு தொடர்ச்சியாக ஒரு திசையில் கிளர்வுற்று நகரச்செய்யப்படுகின்றன. இவ்வாறாக மின்சாரம் சுற்றுகளில் விடப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது.(எலக்ட்ரான்களின் ஓட்டம் தானே மின்சாரம்!)

சிலிகான்கள் குறைகடத்திகள் ஆதலால் அதில் கொஞ்சம் மாசு தனிமங்கள் சேர்க்கப்பட்டு பெர்க் மாதிரியான வேஃபர் வடிவில் சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகின்றன.
 இவை இல்லாவிட்டால் செயற்கை கோள்களை நீண்டகாலம் செயலாற்ற வைக்க இயலாமல் போயிருக்கும்.









சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1
பொதுவாக சோலார் பவர் சிஸ்டத்தை இரண்டு வகையாகபிரிக்கலாம்.

1. சோலார் பேனல்களிலிருந்து பெறப்படும் டி.சி மின்சாரத்தை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் ஒழுங்கு படுத்தி 12 வோல்ட் பாட்டரிகளில் சேமித்து அதை கொண்டு 12 வோல்ட் டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய விளக்கு, பேன் போன்றவற்றை இயக்க பயன்படுத்துவது டி.சி பவர் சிஸ்டம் .

2. மேற்கூறியவாறு பாட்டரிகளில் சேமிக்கப்பட்ட டிசி மின்சாரத்தை  இன்வெர்ட்டர் என்ற சாதனத்தின் மூலம் 230வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி, நாம் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களை இயக்க பயன்படுத்துவது ஏசி பவர் சிஸ்டம்.

இதற்கு முந்தைய பதிவுகளில், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள 230 வோல்ட் ஏசி பவர் சிஸ்டத்தை பற்றி விரிவாக பார்த்து விட்டோம். இனி டிசி பவர் சிஸ்டத்தை பற்றி பார்க்கலாம்.கீழே காட்டப்பட்டுள்ள படம் டி.சி சோலார் பவர்  சிஸ்டத்தின் அடிப்படை இணைப்பை விளக்குகிறது.
 

இதன் அடிப்படையில்தான் டிசி சோலார் பவர் சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

கீழே உள்ள லாந்தர் விளக்கு மாடல்  சோலார் பவர் சிஸ்டத்தை பாருங்கள்.



இதில் சோலார் பேனல் நீங்கலாக பாட்டரி, சார்ஜ் கண்ட்ரோலர், சி.எஃப்.எல் பல்பு ஆகியவை விளக்கினுள் பொருத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி படும்படி பகல் நேரத்தில் பேனலை வைத்து விட்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வயரை விளக்கில் இணைத்து விட வேண்டும். பாட்டரி சார்ஜ் ஆகிவிடும். இரவில் விளக்கை மட்டும் எடுத்து எமெர்ஜென்சி விலக்கு போல உபயோகப்படுத்தலாம். இந்த விளக்கு எரியும் நேரம் இதில் பொருத்தப்பட்டுள்ள பாட்டரி, சோலார் பேனலின் திறனை பொறுத்து வேறுபடும். உத்தேசமாக 10W/12V சோலார் பேனல், 7Ah /12V பாட்டரி, 7W CFL பல்பு கொண்ட லைட் 8-10  மணி நேரம் எரியும்.




பொதுவாக சோலார் டி.சி பவர் சிஸ்டத்தில் சி.எஃப்.எல் பல்பு அல்லது எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படும். இவற்றின் வேறுபாடு, பயன் பற்றி இனி பார்ப்போம்.

மின் பல்புகளில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தின் அளவு லுமென்ஸ்(Lumens) என அழைக்கப்படும். அதைப்போலவே சாதாரண குண்டு பல்பு  Incandescent Bulp எனப்படும். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்.



40 வாட்ஸ் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தின் அளவு 450 லூமென்ஸ் ஆகும். ஆதே வெளிச்சத்தை 8-12 வாட்ஸ் சி.எஃப்.எல் பல்பும், 4-5 வாட்ஸ் எல்.இ.டி பல்பும் தருகிறது.



அதாவது குண்டு பல்புக்கு தேவைப்படும் மின்சாரத்தில் 5-ல் 1 பங்கு மின்சாரத்தை சி.எஃப்.எல் பல்பும், 8-ல் 1 பங்கு மின்சாரத்தை எல்.இ.டி பல்பும் எடுக்கிறது. அதே நேரத்தில் அதன் வாழ்நாளும் அதிகம். சாதாரண குண்டு பல்பின் ஆயுட் காலம் 1200 மணி நேரம். சி.எஃப்.எல் பல்பின் ஆயுட்காலம் 10,000 மணி நேரம். எல்.இ.டி பல்பின் ஆயுட்காலம் 50,000 மணி நேரம் ஆகும்.

இந்த சி.எஃப்.எல், எல்.இ.டி பல்புகள் நேரடியாக மின்சாரத்தில் இயங்கக்கூடியது அல்ல. 6V/12V DC மின்சாரத்தில் எரிய அதற்குரிய சோக் எனப்படும் எலெக்ட்ரானிக் பாலஸ்ட்  இணைக்கப்பட்டிருக்கும். அதைப்போலவே நாம் உபயோகிக்கும் 230V ஏ.சி மின்சாரத்தில் எரியும் சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி விளக்குகளில் அதற்கான பாலஸ்ட் இணைக்கப்பட்டிருக்கும்.

இனி மத்திய அரசு மானியம் பெற அங்கீகரிக்கப்பட்டுள்ள சிஸ்டம் மாடல்களை பற்றி பார்க்கலாம்.

1. SLOAR LANTERN

சோலார் பேனல்  -- 10W/12V
பாட்டரி-----------------7 AH/12V
பல்பு ---------------------7 W CFL
பாட்டரி சார்ஜிங் நேரம்------- 4 மணி நேரம்
உபயோகிக்கும் நேரம்---------12 மணி நேரம்.

2. CFL HOME LIGHTING SYSTEM

 MODEL NO.1 - ONE LIGHT

சோலார் பேனல்---------------- 18W/12V
பாட்டரி-------------------------------- 20AH/12V
பல்பு ------------------------------------ CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.2 - 2 LIGHT

சோலார் பேனல் ---------------  37 W/12V
பாட்டரி ------------------------------ 40AH/12V
பல்பு ------------------------------------ 2 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்                                                                                                                  

MODEL NO.3 - 2 LIGHT + 1 FAN

சோலார் பேனல் ------------- 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------2 Nos CFL 9W/11W
ஃபேன் ------------------------------20W - DC FAN
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.4  - 4 LIGHTS

சோலார் பேனல் ------------- 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------4 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

மேற்கூறிய மாடல்கள் அனைத்தும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்களிடம் கிடைக்கும். அவர்களிடம் வாங்கினால் அரசு மானியம் கிடைக்கும்







நெல்லை: தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் நிலவி வரும் மின்வெட்டை சமாளிப்பதற்கு முதற்கட்டமாக 20,000 சோலார் மின்விளக்குகள் அமைக்க தமிழக அரசு ரூ.52 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரலாறு காணாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. கிராமப்புறங்களில் 18 மணிநேரமும், நகர்ப் பகுதிகளில் 12 மணிநேரமும் மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமப் புறங்களில் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் இல்லாமல் தெருக்கள் இருள் அடைந்து காணப்படுகின்றன. மக்கள் பகல் பொழுதை எப்படியாவது ஓட்டிவிட்டாலும், இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

தெரு விளக்குகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, மின்சாரத்தை சேமிக்க சோலார் திட்டம் மூலம் தெரு விளக்குகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வருகிறது. அதை கருத்திற்கொண்டு மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் சோலார் மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் 18 லட்சத்து 28,461 மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோலார் மின்விளக்குகள்: 2012-13ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 20,000 மின்விளக்கு அமைக்கப்படுகிறது. மேலும் 500 வாட் திறன் கொண்ட சோலாரை ஒரு இடத்தில் பொருத்தி 10 தெரு விளக்குகள் எரியும் வகையில் அமைக்கப்படுகிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் விளக்குகள் அமைக்கப்படுகிறது.

 2012-2013ல் 20,000 தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்குகளில் வார்டு வாரியாகவும், தெரு வாரியாகவும் டென்ஜெட் கோ மூலம் மாற்றி புதிய 18 ஆயிரம் சோலார் விளக்குகளை அமைக்க 52 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம்- 1125, திருவள்ளுர்- 1160, கடலூர்- 825, விழுப்புரம்- 1090, வேலூர்- 1000, திருவண்ணாமலை- 790, சேலம்- 700, நாமக்கல்- 560, தர்மபுரி- 400, கிருஷ்ணகிரி- 550, ஈரோடு- 550, திருப்பூர்- 635, கோயம்புத்தூர்- 420, நீலகிரி- 120, தஞ்சாவூர்- 1290, நாகப்பட்டினம்- 830, திருவாரூர்- 730, திருச்சி- 865, கரூர் - 380, பெரம்பலூர்- 190, அரியலூர்- 320, புதுக்கோட்டை- 620, மதுரை- 840, தேனி- 200, திண்டுக்கல்- 475, ராமநாதபுரம்- 495, விருதுநகர்- 540, சிவகாசி- 535, திருநெல்வேலி- 795, தூத்துக்குடி- 750, கன்னியாகுமரி- 420.


கிராமங்களில் ஒளி வீசும்... அரசின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, இட்டேரி கிராமங்களிலும், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களிலும் சோலார் மின்னொளி திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இனி கிராமங்களில் அனைத்து தெருவிளக்குகளும் ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை.

கூடங்குளம் அணு உலையில் மீண்டும் சோதனைக்கு அனுமதி


கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மீண்டும் முழு அளவிலான சோதனை நடத்த, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி.,) அனுமதி அளித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும்; அதற்கு பின், மின் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படும்.தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில், இரண்டு உலைகள் உள்ளன.அதில், முதலாவது அணு உலையிலிருந்து, இன்னும் சில நாட்களில் மின்சாரம் உற்பத்தியாக உள்ளது. அதற்கான இறுதிகட்ட சோதனை முயற்சியில் அணுசக்தி துறை விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில், அணு சக்தி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட, ஏ.இ.ஆர்.பி.,யின் தலைவர், சதிந்தர் சிங் பஜாஜ் நேற்று இது குறித்து கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில், "ஹைட்டோ - டெஸ்ட்' எனப்படும், முழு அளவிலான சோதனையை மீண்டும் நடத்த, நேற்று முன்தினம் அனுமதி வழங்கியுள்ளோம்.

இதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மீண்டும் சோதனை நடத்த அனுமதி வழங்கியுள்ளோம். இதன் மூலம், இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்.,) மற்றும் ரஷ்ய அதிகாரிகள், முதல் அணு உலையில் மீண்டும் இறுதிகட்ட சோதனை நடத்தவும், அதன் மூலம் இறுதிகட்டத்தை அடைந்து மின் உற்பத்தி துவக்கவும் முடியும்.

பல விதங்களாக நடத்தப்படும், முழு அளவிலான சோதனைக்கு, "ஹைட்டோ - டெஸ்ட்' என பெயர். இதில், திடீரென அணு உலையில் ஏற்படும் மின் தடை, அழுத்த குறைபாடு, வெப்ப குறைபாடு போன்ற இடர்பாடுகளின் போது, நிலைமையை எவ்வாறு சமாளிப்பது போன்ற சோதனைகளும் இருக்கும்.அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக அமையுமேயானால், அடுத்த கட்டத்தை அடைய அனுமதி வழங்குவோம். அடுத்த, இரண்டு வாரங்களுக்குள், மின் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.









தேவர் மகன் முதல் விஸ்வரூபம் வரை...


சென்னை: கமல்ஹாசன் என்றால் சாதனை, புதுமை என்பது போக சர்ச்சையும் கூடவே ஒட்டிப் பிறந்ததாகும். அவரது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவிலேயே சர்ச்சை இருந்தது என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விஷயம். சினிமாவுக்காக, சினிமாவை நம்பி மட்டுமே இருப்பவர் என்றால் நிச்சயம் அது கமல்ஹாசனாக மட்டுமே இருக்க முடியும். இவர் ஒருவர்தான் சினிமாவுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பவர். வேறு எந்த வேலையிலும் ஈடுபடாத ஒரு மனிதரும் இவர்தான். ஆனால் இவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் கூடி நின்று கும்மியடிப்பதுதான் வினோதமாக இருக்கிறது. கமல்ஹாசன் சர்ச்சைகளைத் தேடிப் போவதும், சர்ச்சைகள் இவரைத் தேடி வருவதும் கிட்டத்தட்ட இவரது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவிலேயே தொடங்கி விட்டது என்று கூறலாம்


களத்தூர் கண்ணம்மா.கமல்ஹாசன் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். ஆனால் அப்போது வேறு ஒரு சிறுமி நட்சத்திரம்தான் விருது பெறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கமல்ஹாசன் தனது அட்டகாசமான நடிப்பு மற்றும் முக பாவனையால் விருதைத் தட்டிச் சென்று விட்டார். அப்போது கமல்ஹாசனுக்கு விருது கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்டதாம்.

தேவர் மகனில் முதல் பெரிய சர்ச்சை தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் முதல் பெரிய சர்ச்சையைச் சந்தித்தார். அதில் சாதி வன்முறையை அவர் சித்தரித்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அதை இலகுவாக சமாளித்திருந்தார் கமல்ஹாசன். படம் மிகப் பெரிய ஹிட்டானது. கமல்ஹாசன் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படங்களில் ஒன்றாக தேவர் மகனும் உள்ளது


ஹே ராம் ஹே ராம் படமும் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தில் இஸ்லாமியர்களை தேசத் துரோகிகள் போல காட்டியுள்ளார் கமல்ஹாசன் என்று படம் வருவதற்கு முன்பே சர்ச்சை வெடித்தது. அதேபோல மகாத்மா காந்தியையும் அவர் மரியாதைக்குறைவாக சித்தரித்துள்ளார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த சர்ச்சைகளால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏதும் இல்லை. வந்த பிறகும் கூட சர்ச்சை பெரிதாகவில்லை.

விருமாண்டியான சண்டியர் சண்டியர் என்ற பெயரில் தொடங்கிய படம் பெருத்த எதிர்ப்பில் சிக்கியது. தலித் மக்களுக்கு எதிரான படம் இது. தென் மாவட்டங்களில் ஆயுதக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான படம் என்று தலித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி போர்க்கொடி உயர்த்தினார். படப்பிடிப்பையும் நடத்த விட மாட்டோம் என்று அவர் அறிவித்தார். இதையடுத்து படத்தின் பெயரை சண்டியர் என்பதிலிரு்நது விருமாண்டி என மாற்றினார் கமல். சென்னையில் வைத்து கிராமக் காட்சிகளை செட் போட்டு எடுத்து வெளியிட்டார். படம் சூப்பர் ஹிட் ஆனது.

வசூல் ராஜா MBBS வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தியில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் இது. இப்படத்தின் தலைப்பு டாக்டர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதாக உள்ளதாக கூறி மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். வழக்கும் போடப்பட்டது. இருப்பினும் தலைப்புக்கு ஆட்சேபனை இல்லை என்று கோர்ட் தீர்ப்பளிக்கவே அதே பெயரிலேயே படம் வெளியாகி ஹிட் ஆனது.


மும்பை எக்ஸ்பிரஸ்மும்பை எக்ஸ்பிரஸ் எதிர்பாராத வகையில் டாக்டர் ராமதாஸும், தொல் திருமாவளவனும் இந்தப் படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் தலைப்பு முற்றிலும் ஆங்கிலத்தில் இருப்பதாக அவர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் ஜெயா டிவிக்கு இப்படத்தை விற்ற கமல்ஹாசன், அதே பெயரிலேயே படத்தையும் ரிலீஸ் செய்தார்.


தசாவதாரம்விஸ்வரூபம் படத்தைப் போலவே ஆரம்பம் முதல் பல்வேறு சோதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்த படம்தான் தசாவதாரம். படம் வருமா, வந்துருமா என்ற ரீதியில் கிண்டலடித்துப் பலரும் பேசும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் கமல்ஹாசன் படங்களிலேயே வசூலில் சாதனை படைத்த படம் தசாவதாரம். இப்படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. ஆனாலும் அது பெரிதாகவில்லை.

 மன்மதன் அம்பு  படத்தில் கண்ணோடு கண்ணைக் கலந்தாய் என்ற பாடலுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பாடலையே படத்திலிருந்து எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் கமல்.

உன்னைப் போல் ஒருவன்  படத்திலும் கமல்ஹாசன் இஸ்லாமியர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது கமல்ஹாசனின் சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன அவரது விஸ்வரூபம் படம் மூலம். முந்தைய சர்ச்சைகளை வெற்றிகரமாக கடந்ததைப் போல இந்த சர்ச்சையிலிருந்தும் மீள்வாரா உலக நாயகன் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.  




கமல் இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம்' படம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் நேற்று வெளியிடப்பட்டது. ஆந்திராவில் நேற்று காலை படம் வெளியாகி, பாதி படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென நிறுத்தப்பட்டதால், ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் முழுவதும், தெலுங்கு மொழியில், நேற்று, விஸ்வரூபம் படம் வெளியானது. ஐதராபாத்தில், 22 தியேட்டர்களில் படம் வெளியானது. மீலாது நபியையொட்டி, நேற்று மட்டும் படத்தை நிறுத்தி வைக்க போலீசார் கேட்டுக் கொண்டதால், படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பதியில் மூன்று தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபத்தை, தமிழகத்திலிருந்து கமல் ரசிகர்கள் சென்று பார்த்தனர். கர்நாடகாவில் பெங்களூரில், 15 தியேட்டர்கள் உட்பட, பல்வேறு நகரங்களில், 26 தியேட்டர்களில் திரையிடப்பட்டன.தமிழகத்தில், "விஸ்வரூபம்' படத்தை வெளியிட, இம்மாதம், 28ம் தேதி வரை, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் நேற்று, "விஸ்வரூபம்' வெளியிடப்படவில்லை. புதுச்சேரி மற்றும் இலங்கையிலும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெளியீடு
இதற்கிடையே, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், விஸ்வரூபம் படம் நேற்று வெளியிடப்பட்டது. கேரளாவில், 71 தியேட்டர்களில் படம் வெளியானது. பாலக்காடு, எர்ணாகுளம், மலப்புரம், , கஞ்சிக்கோடு, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் பார்க்க, தமிழக ரசிகர்கள் அதிகளவில் சென்றிருந்தனர்.வெளிநாடுகளில்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா நாடுகள் உட்பட, எட்டு நாடுகளில் நேற்று, விஸ்வரூபம் வெளியானது. தியேட்டர்கள் அனைத்திலும், நான்கு தினங்களுக்கு, முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது; ஆனால், அங்கு பல தியேட்டர்களில், படம் திரையிடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. வெளிநாடுகளில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள நிலையில், திருட்டு வி.சி.டி., சென்னை வழியாக, மற்ற நகரங்களுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, கமல் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.ரஜினி வேண்டுகோள் கமலுக்கு ஆதரவாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படத்தை, முழுமையாக தடை செய்யவேண்டும் என்ற கருத்திலிருந்து இஸ்லாமியர்கள் மாறவேண்டும். கமலுடன் பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து, படத்தை வெளியிட உறுதுணையாக இருக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார்

குடியரசு தினம் என்றால் என்ன?


நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.
நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.
இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.
முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர்.





மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.
மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும், துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.
சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உண்மையான குடிமக்கள்!
குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.
தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம்.




இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்வோம். ­
ஜெய்ஹிந்த்!..............