புடலங்காய்.
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..
புடலன்க்காயில் நன்கு முற்றிய கையே உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையே பயன் படுத்த வேண்டும்
1.விந்துவை கெட்டி படுத்தும் ,ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய்காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு
2.தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்
3.அஜீரண கொலரை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
4.குடல் புன்னை ஆற்றும் .வைத்து புண் , தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்
5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது
6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது
7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியே அதிகரிகிறது
8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும் கருப்பைக் கோளாறையும் குணா படுத்தும்கண் பார்வையே அதிகரிக்க செய்யும்
9.இதில் அதிகம் நீர்சத்து இருபதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்:-
* முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.* முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.* இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.* கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்
முகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்:-
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.*சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!
நீரிழிவு நோய்க்குநீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.வாய் துர்நாற்றம் நீங்கவயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.இருமல், இரைப்புசளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.விஷக்கடிக்குசிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.வயிற்றுக் கடுப்பு நீங்கவயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.பெண்களுக்குகுழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.தாது விருத்திக்குதாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
வெயிலால் சருமத்தில் அரிப்புக்கள் அதிகமா இருக்கா?

குளிர்காலத்தில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தை விட, கோடைக்காலத்தில் தான் அதிகப்படியான சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் இன்றைய காலத்தில் யாரும் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்வதில்லை. பலருக்கு வீட்டை விட, வெளியே தான் அதிக வேலை இருக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்க போகிறது. இதுவரை வேலையில் ஏற்படும் பிரச்சனையையே சரிசெய்ய முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சருமத்தில் வேறு பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன. அதில் ஒன்று தான் சருமத்தில் அதிகப்படியான வெப்பம் படுவதால் ஏற்படும் அரிப்புக்கள். பொதுவாக இத்தகைய அரிப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது மற்றும் உடல் வெப்பம் தான். இதனால் சருமத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகளாக ஆங்காங்கு காணப்பட்டு, அதன் மேல் அரிப்புக்கள் உண்டாகி, எரிச்சல் உண்டாவது என்றெல்லாம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உடலின் கழுத்து, முகம், கைகள், முதுகு, மடிப்புக்கள் உள்ள இடங்கள் போன்றவற்றில் ஏற்படும். குறிப்பாக இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இத்தகைய பிரச்சனையை தவிர்க்க ஒருசில இயற்கை முறைகள் மற்றும் செயல்கள் இருக்கின்றன, அத்தகையவற்றை சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!கற்றாழை ஜெல் கற்றாழையின் ஜெல்லை தினமும் மூன்று முறை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால், அரிப்புக்கள் ஏற்பட்ட இடத்தில் உண்டான காயமானது குளிர்ந்து, விரைவில் குணமாகிவிடும்.கடலை மாவு கடலை மாவை நீரில் கலந்து, அரிப்புக்கள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்புகளானது போய்விடும்.ஐஸ் கட்டிகள் சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் அரிப்புகளை நீக்க, அந்த இடங்களில் ஐஸ் கட்டிகளை மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அரிப்புக்களானது பரவாமல் இருப்பதோடு, எளிதில் நீங்கும்.வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சி அடையச் செய்வதில் மிகவும் சிறந்தது. எனவே சருமத்தில் எரிச்சலையூட்டும் அரிப்புக்களை நீக்க, வெள்ளரிக்காயின் துண்டுகளை தேய்த்து வர குணமாகும்.ஃபேஸ் க்ரீம் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட்டால், அப்போது நிச்சயம் ஃபேஸ் க்ரீம்கள் மற்றும் இதர மருந்துகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.சீமைச்சாமந்தி டீ சீமைச்சாமந்தி டீயை அரிப்புகள் உள்ள இடத்தில் தடவினால், சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, அரிப்புக்கள் நீங்கிவிடும்.பேக்கிங் சோடா சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, குளித்தால், சருமம் மென்மையடைந்து, அரிப்புக்களும் நீங்கும்.பாடி லோசன்கள் குளித்தப் பின்பு, சருமத்தில் உள்ள ஈரம் காயும் வரை காத்திருக்காமல், உடனே சருமத்தில் பாடி லோசன்களை தடவுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும்.ஆடைகள் உடுத்தும் ஆடைகள் எப்போதும் லூசாக இருக்க வேண்டும். இல்லையெனில் சருமத்துளைகளால் சரியாக சுவாசிக்க முடியாமல், பின் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, அரிப்புகள் உண்டாகும்.சோளமாவு சோளமாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து வர, அரிப்புகள் நீங்கும்.எலுமிச்சை ஜூஸ் தினமும் நான்கு முறை எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.தர்பூசணி தர்பூசணியை அரைத்து, அதனை உடலில் அரிப்புக்கள் ஏற்படும் இடங்களில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமம் குளிர்ச்சி அடைந்து, அரிப்புக்கள் நீங்கும்.டால்கம் பவுடர் தினமும் குளித்த பின்பு, உடலுக்கு டால்கம் பவுடரை போட வேண்டும். அதிலும் 3-4 முறை தினமும் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையினால், சருமமானது அதிக எண்ணெய் பசையுடன் இருக்கும். எனவே டால்கம் பவுடரைப் போட்டால், இத்தகைய பிரச்சனையையும் தடுக்கலாம்.வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை தவிர்க்கலாம்.தேன் சருமத்தை குளிர்ச்சியடையச் செய்வதில் தேன் சிறந்த பொருள். எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை நீக்குவதற்கு தேனை தடவி, ஊற வைத்து கழுவினால், சிறந்த பலனைப் பெறலாம்.புதினா டீ புதினாவால் செய்யப்படும் டீ உடல் வெப்பத்தை குறைத்து, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் சிறந்தது. எனவே இந்த டீயை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், அரிப்புக்களை நீக்க முடியும்.தக்காளி தக்காளியிலும் சருமத்தை குளிர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும் பொருள் அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, தக்காளியை அரைத்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்கலாம்.