Vishwaroopam-2013 -விஸ்வரூபம் திரைவிமர்சனம்.

முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....
படம் 5 மணிநேரம் எடுத்து இருக்கார்... அதை எப்படி இரண்டரை மணி நேரத்தில்  கட் செய்து கொடுப்பது என்று  கமல் யோசித்துக்கொண்டு இருப்பதாக இந்த படத்தை பற்றிய முதல் தகவல் மீடியாக்களில் நுழைந்தது...

அனுராக்கஷ்யாப்பின் கேங்ஸ் ஆப் வாசீப்பூர் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகமாக வந்தது... அது  போல இந்த திரைப்படமும் இரண்டு பாகமாக வரும் என்று நினைத்தேன்.....  படத்தை பார்த்தேன்... என் கனிப்பு பொய்க்கவில்லை. சரி உண்மையிலேயே திரைப்படங்கள் மூலம் இந்து முஸ்லீம் துவேஷம் வளருகின்றதா? 100 பர்சென்ட்டில் 5  பர்சென்ட்  வரலாம் அதுவும்  படம் பார்த்து வெளியே வந்த உடன் மறந்து விடுகின்றார்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மை...ஆனால்  இந்து முஸ்லீம் துவேஷம் ஏப்போது ஆரம்பித்தது தெரியுமா?



1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடு கொந்தளிப்பில்  ஆழ்ந்தது... அது பெரிய கொடுமை...ஆனாலும் தமிழகம் அமைதி காத்தது...பெருமபாண்மையான இந்துக்கள் இந்த செயலை வண்மையாக கண்டித்தார்கள்... அதிகம் இந்து  மக்கள் வாழும் இந்தியாவில் பிஜேபி  ஒரு முறைதான் ஆட்சியை பிடித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...அந்த செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை....ஆனால் குஜராத்தில் நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்ட மோடி இன்னும் முதல்வராகத்தான் வீற்று இருக்கின்றார்... இது நகைமுரண்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


புற்றிசல் போல இப்போது போல  சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் அப்போது இல்லை. ஆனால் மேல்ல சேட்டிலைட் சேனல்கள் கால் ஊன்றும் போது...1998 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்பு நிழ்ந்தது... அத்வானியை கொல்ல நடந்த சதி... அதில் ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் இருந்து போனார்கள்... ஆனாலும்  மக்கள் அமைதிகாத்தார்கள்... முஸ்லிம்கள் மீதான முதல் வெறுப்பு அப்போதுதான் உருவானது. வெளிப்படையாக டீக்கடைக்களில் விவாதிக்கப்பட்டார்கள்...  கோவை குண்டு வெடிப்பு  சம்பவத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத அப்பாவி முஸ்லிம்களை பலரை வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தார்கள்.... ஏதோ  ஒரு இயக்கம் செய்த செயலுக்கு அத்தனை பேரையும் சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள்... மார்க்கெட் போக பயந்தார்கள்.. காரணம் ஒரு இடத்தில் மட்டும் குண்டு வெடிக்கவில்லை... அதனால் இன்செக்யூரிட்டி காரணமாக முஸ்லிம் சகோதரர்மார்களுக்கு வீடு கொடுக்க, கடை வாடகை விட  யோசித்தார்கள்...  அதான் நிதர்சன உண்மை...



சரியாக மூன்று நாட்கள் பாம்பாயில் தொடர்ந்து குண்டு வெடிப்பை  தீபாவளி போல மும்பை தாஜ் ஓட்டல்  குண்டு வெடிப்பை  நிகழ்த்தினார்கள்.. அப்பாவிகள் 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள்...  அந்த தாக்குதலை தொடர்ந்து நேரலையில்  பார்க்கும் பொதுஜனத்தின் மனதில்  கோபம் வரவே வராதா?


ஒரு  இந்து கேரக்டர், ஒரு கிருஸ்த்துவ  கேரக்டர்,ஒருமுஸ்லீம் கேரக்டர் கொலை செய்வது போல சினிமாவில் காட்டப்படுவதற்கும் நேரில் துப்பாக்கியால் சுட்டு கொல்வதை பார்ப்பதற்க்கும் வித்யாசம் தெரியாமல் இங்கு யாரும் இல்லை...


நுறாவது நாள் படம் பார்த்து விட்டு ஒரே ஒரு ஜெயபிரகாஷ்தான் கொலை செய்தான் என்று ஒரு வார்த்தை சொன்னான்... ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் படம் பார்த்த அத்தனை பேரும் கொலை செய்யப்புறப்படவில்லை... அதுவும் படம்  பார்த்து விட்டுதான் கொலை  செய்தான் என்பதையும் என்னால்  ஏற்றுக் கொள்ள முடியாது...ஏற்க்கனவே ஒளிந்த வன்மம் அவனை கொடுரனாமாற்றி இருக்கின்றது....


1998 ஆம் ஆண்டு கோவை குண்டு  வெடிப்பு வெடித்தது....பாபர் மசூதிக்கு அந்த குண்டு வெடிப்பு எதிர்வினை  என்று ஒரு சில முஸ்லிம் இயக்கங்கள் வக்காலத்து வாங்கின... இதற்கு முக்கிய வரலாற்று நிகழ்விளை எடுத்துக்காட்டாக  கொடுக்கின்றேன்..

தமிழகத்தில் ஒரு காலத்தில் ஓடி ஓடி விடுதலைபுலிகளுக்கு  உண்டி குலுக்கி இருக்கின்றோம்..  எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தமிகத்தில் தமிழர்களோடு விடுதலைபுலிகள் இரண்டற  கலந்து இருந்தார்கள்..  அவர்களுக்கு உறைவிடம்,உடை, பணம் என்று கொடுத்து உதவினார்கள்... நிறைய போராட்டங்களை நடத்தினார்கள்..  ஈழத்தமிழர்களுக்கு உயிர் கொடுக்கவும் பொது ஜனம் தயாராக இருந்தது....


அமைதி பூங்காவாக  திகழ்ந்த  தமிழ்நாட்டில் ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்து போனார்...ஈழத்தில் ராஜிவ் நடத்திய  செயலுக்கு  எதிர்வினை என்று விடுதலைபுலிகள் சொன்னாலும் தமிழக பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை....விடுதலைபுலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள்...  அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட்  இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...

தமிழர்கள் அமைதியான வாழ்க்கையை கடந்த 500 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள்... அவர்களுக்கு குண்டு வெடிப்பு எல்லாம் புதிய விஷயம்... அதை  நேரில், ஊடகத்தில் தொடர்ந்து அந்த செய்திகளை படிக்கும் போது  அவர்கள் மனதில் குண்டு வைத்த விடுதலைபுலியாக இருந்தாலும், காவிபயங்கரமாக இருந்தாலும் ,முஸ்லிமாக இருந்தாலும்,   தமிழர்களால் வெறுக்கப்படுகின்றார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.
சினிமாவில் காட்டப்படுவதால்  பொதுமக்கள் மத எதிர்ப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.. ஆனால் ஊடகங்களில் தினம் வரும் செய்தியால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகின்றார்கள் என்பது மறுக்கமுடியா உண்மை.
நியாயப்படி பார்த்தால், பிராமணர்கள்தான்... காலம் காலமாக திரைப்படங்களில் தங்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்று போராட வேண்டும்.... :-)
சினிமாவுக்கு  நிதர்சனத்துக்கும் அவர்களுக்கு வித்யாசம் தெரிகின்றது.... போராட வில்லை என்ற காரணத்தால் அவர்கள் கோழைகளும்  அல்ல.... போரின்  உச்சகட்டம்  அகிம்சை என்பது போல அவர்கள் அகிம்சை வழியை நாடுகின்றார்கள்..... அல்லது புறக்கணிக்கின்றார்கள் அல்லது கடந்து போகின்றார்கள்... என் அனுமதி இல்லாமல் என்னையாராலும் காயப்படுத்த முடியாது  என்று மகாத்மா சொல்லி இருக்கின்றார்,..
சரி இந்த படத்துக்கு  எதிராக எழுந்த சர்ச்சைக்கு ஒரு காமன் மேனாக பதில்  சொல்லவேண்டும் என்று  நினைத்தேன்.... அவ்வளவுதான்...

===================
விஸ்வரூபம்  படத்தின் ஒன்லைன்..

இந்திய உளவாளியின் கதை....
======================
விஸ்வரூபம் படத்தின் கதை என்ன?

இந்திய உளவாளியான முஸ்லீம் கமல் தாலிபான்கள் படையில் சேர்ந்து எப்படி அமெரிக்கா  மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துகின்றார் என்பது கதை.
==================
படத்தின் சுவாரஸ்யங்கள்....

நடன கலைஞனாக  கமல் முதல் காட்சியில் தோன்றும் போது அந்த நளினத்தில் எல்லோருமே மூக்கில் விரல் வைக்கின்றார்கள் .. அப்படி ஒரு நடிப்பு.. சான்சே இல்லை..

ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா  இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா...

குறட்டை விட்டுகிட்டு கொட்ட  கொட்ட முழுச்சிக்கிட்டு மனைவியை கமல் வேவு  பார்க்கும் காட்சி அருமை.

நிறைய ஆங்கில படங்கள் பார்க்கும் நபர்களுக்கு இந்த படத்தின்  காட்சிகள் பெரிதாய் ஈர்க்காது என்றாலும், தமிழ் படத்தி கமலை தவிர இது போன்ற  களத்தையும் தளத்தையும்  தொடுவது குறைவு....

கேமரா ஒர்க் பின்னி இருக்கின்றார்கள்... ஆப்கான்  காட்சிகள் அசத்தல்... நான் லீனியரில் கதை சொல்வதால் இந்த பக்கம் அமெரிக்காவில்  கதை நடக்க பிளாஷ் பேக் காட்சிகளில் ஆப்கான்  காட்சிகள் வருகின்றன....

இன்னும் பலர் படம் பார்க்காத காரணத்தால் காட்சிகளை சொல்லி சஸ்பென்ஸ் கெடுக்கவில்லை..ஒரு வரியில் செல்வதென்றால் தமிழ்சினிமாவுக்கு இந்த உழைப்பும் காட்சிகளும் தளமும் புதுசு... தொய்வும் பரபரப்புமாய் இருவேறு உணர்வுகளை இந்த திரைப்படம் தருகின்றது.. அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்..
சத்யவேடு திரை அரங்கில் ரசிகர்கள் கூச்சலுடன் பார்த்த காரணத்தால் பல வசனங்கள் புரியவில்லை... ஆரோ திரிடியில்  சத்தியத்தில் பார்க்கவேண்டும்..


=======================
படக்குழுவினர் விபரம்.

Directed by Kamal Haasan
Produced by
Chandra Haasan
Kamal Haasan
Written by Kamal Haasan
Atul Tiwari
Starring Kamal Haasan
Pooja Kumar
Andrea Jeremiah
Rahul Bose
Jaideep Ahlawat
Music by Shankar-Ehsaan-Loy
Cinematography Sanu Varghese
Editing by Mahesh Narayanan
Studio Raaj Kamal Films International
Distributed by PVP Films
Balaji Motion Pictures
Release date(s)
25 January 2013 (Worldwide except Tamil Nadu[1])
1 February 2013 (Hindi version)
7 February 2013 (Tamil Nadu[2])
Running time 147 minutes [3]
Country India
Language Tamil
Hindi
Budget 95 crore (US$17.29 million)

டேவிட் (david)


விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் "டேவிட்". பட‌த்தை ‌பிஜா‌ய் ந‌ம்‌பியா‌ர் இய‌க்‌கியு‌ள்ளா‌ர்.

விக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். தமிழ் படங்களில் பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து வருவது வரவேற்கத்தக்கது. படத்தோட எதிர்பார்ப்பு மிக அதிகமா இருந்தது. படத்த பார்த்த பின்னாடி .... வெயிட் ... வெயிட்!


                                                           

படத்தோட கதை என்னனா ...

ஒரே பெயர் கொண்ட இரண்டு பேருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் டேவிட் படத்தின் கதை.

1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார். அவருடைய அன்பான அப்பாவாக நாசர். இவர் எப்போதும் ஏசுவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் எல்லோரையும் மதம் மாற்றுகிறார் என்று உள்ளூர் எம்.எல்.ஏ., தனது சுயவிளம்பரத்துக்காக, தன்னுடைய ஆட்களுடன் வந்து நாசரை அடித்து துவம்சம் செய்கிறார். தனது, தந்தையை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க துடிக்கும் ஜீவா, தனது லட்சியத்தில் வெற்றியடைந்தாரா? அல்லது அவர்களை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை


இன்னொரு பக்கம், 2010-ம் ஆண்டு கோவாவில் மீனவனாக வருகிறார் விக்ரம். தன்னுடைய மனைவி வேறொருவனிடம் ஓடிவிட்டாள் என்ற ஏக்கத்தில் முழுநேர குடிகாரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, புத்திமதி சொல்லும் பெண் தோழியாக தபு.

அந்த ஊரில் பெரிய செல்வந்தரின் மகளான இஷா ஷெர்வானியை பார்த்தவுடனேயே இவருக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அவளை தன்னுடைய நண்பன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் சேதி பின்னர் தெரிய வருகிறது. இருந்தும், அவளை திருமணம் முடிக்கவேண்டும் என்று முழு முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
                                                  

பாத்திரப்படைப்புகள்

1. ஜீவா
மும்பையில் கித்தாரிஸ்டாக வரும் ஜீவா படு ஸ்மார்ட். சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், எந்நேரமும் வில்லன்களிடம் சென்று சண்டை போட்டு, இவர் அடிவாங்கி வருவது சலிப்பையே ஏற்படுத்துகிறது.

ஜீவாவுக்கு எப்படியாச்சும் ஒரு ஹிட் கொடுத்திட முடியாதாங்கிற ஏக்கத்துல கண்ட கண்ட கதைங்கள நடிச்சு இன்னும் பாதாளத்துக்கு போறாரு. ரொம்ப மோசம்.
                                    
2. விக்ரம்
கோவாவில் மீனவனாக வரும் விக்ரம், சதா எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். டாஸ்மாக் கடைக்கு விளம்பர தூதரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், முந்தைய படங்களைவிட இப்படத்தில் கொஞ்சம் இளமையாக இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேறு. அடுத்தவன் காதலிக்கு ரூட் விடும் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? என்று தெரியவில்லை. விக்ரம்க்கு வயசு ஆகிடிச்சு. கதை தேர்வுல ரொம்பவே கோட்டை விடுறாரு.
                                     
3. லாராதத்தா
கணவனை இழந்து, குழந்தையுடன் வசிக்கும் பெண்ணாக லாராதத்தா. அழகு பதுமையாய் காட்சியளிக்கும் இவர், தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

4. இஷா ஷெர்வானி
அழகாய் ஜொலிக்கிறார். இவரது கண்களே நிறைய வார்த்தைகள் பேசுகிறது. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு. ஆனால், இவரது கதாபாத்திரத்தை படத்தில் ஊமையாக்கிவிட்டதுதான் வருத்தத்தை அளிக்கிறது.


5. இயக்குனர் பிஜாய் நம்பியார்
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாது. அதுக்காக ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது, பரவாஇல்லை படத்தின் மேகிங் நல்ல இருக்கு. விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்! காட்சிகளில் வலிமை இல்லை, வசனங்களில் வலிமை இல்லை.


6. இசையமைப்பாளர்கள்
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது.

7. ஒளிப்பதிவு
படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள். கண்ணில் ஒற்றிக் கொள்கிற ஒளிப்பதிவை தவிர படத்தில் வேறு எதையும் உருப்படியாக சொல்லவே முடியவில்லை.

8. நாசர்
நாசருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும், அவருடைய பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி -

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.




இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு  Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்கள் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடடும் 

கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

 



இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்ள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3)இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும. 

 


◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள். என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் — 


உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்...

கள்ள நோட்டுகளை அடையாளம் காண


பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும்


பண்புகளை கொண்டது இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)




ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில்
"டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால்
அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
 
 
 
 





ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல
நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில்
தூக்கி பார்த்தால் தெறியும்.

காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.
இப்படி பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள்
அடிகடி மாற்றப்படலாம்,








மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும்
ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது



.