குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.....

நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது. சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது’’ என்கிறார் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா.

‘‘குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.

குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்னைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும். எண்ணெய் வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருக்கும். அது ஜீரணத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக இருந்தது. இப்போது அல்ட்ரா ரீஃபைண்ட் ஆயில், டபுள் சூப்பர் ரீஃபைண்ட் ஆயில் என நிறைய வந்து விட்டது. அதிகமாக ரீஃபைண்ட் செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்து விடும். சூடாக்கிய எண்ணெயையும் திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.

பருமனும் ஏற்படலாம். முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. ‘‘நாம் பயன்படுத்தும் அரிசியும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன் இருந்த கைக்குத்தல் அரிசி இப்போது இல்லை. இப்போது பாலீஷ்ட் ரைஸ், பாஸ்மதி ரைஸ், டபுள் ரீஃபைண்ட் ரைஸ் என எத்தனையோ வகை அரிசிகள். அரிசியை அதிகம் பாலீஷ் செய்து வெண்மையாக்குவது நல்லதல்ல. அப்படிப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைந்து, கலோரி அதிகமாகி, பருமனை அதிகமாக்கி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பாதி ‘டீத் ப்ரௌன் க்ரோத்தன் ஃபுட்’. அதுல 60 சதவீதம் நியூட்ரிஷன் சத்துகள் இருக்காது. வெறும் டேஸ்ட் மட்டும்தான் இருக்கும். இந்தப் பொருட்களால் பருமன், இன்சுலின், ஹார்மோன், வயிற்றுப் பிரச்னைகள், முடி கொட்டுதல் என பல பிரச்னைகள் ஏற்படும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இப்போது உள்ள எண்ணெய்களில் கெமிக்கல் மாற்றம் ஏற்பட்டு, அவை இதய நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெய் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இப்போதுள்ள எண்ணெய் பத்து ஸ்பூன்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி தேவையில்லாத நோய்கள் வர காரணமாகி விடுகிறது. ஆக, ஈஸி என்று நினைப்பதே நமக்கு பாதகமாகி விடுகிறது. சமையலில் சில வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையான சிலவற்றை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’’ என்கிறார் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ஜெயஸ்ரீ கோபால்.

நீங்கள் குறட்டை விடுபவரா

நீங்கள் குறட்டை விடுபவரா?!

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை முச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

காற்று வாங்கப் போகலாமா

காற்று வாங்கப் போகலாமா?

உலகம் இனிமையானது; அதனினும் இனிமையானது, வாழ்க்கை; வாழ்க்கை வாழ்வதேற்கே; வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய இன்பமே உலக இன்பம். நம்முடைய வாழ்க்கையை இன்பமுடையதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு கலை. வாழும் கலையைக் கற்றவர் நீண்ட நாள் வாழ்கின்றனர். வாழ்க்கையில் பெறப்படுகின்ற இன்பத்தின் அளவே வாழ்க்கையில் கிடைக்கப் பெறுகின்ற வெற்றியின் அளவாகும்.
இன்பமில்லாத வாழ்க்கையை உடையவர், வாழ்க்கையின் வெற்றிகளைப் பெற முடியாது.
வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையை வகுத்திருப்பது, இயற்கை. இயற்கைக்கு மாறாக வாழ்வது வாழ்க்கையாகாது. இயற்கையுடன் இயைந்து வாழ்வதேக வாழ்க்கை. மனிதன் நெடுங்காலம் வாழ வேண்டுமானால், உடம்புக்குத் தேவையான உணவுப்பொருள்களைத் தருதல் வேண்டும். சமைப்பது மட்டுமே உணவாகாது.
சுவாசம் நின்றுவிட்டால், உயிர் போயிவிடும். உடம்பு இறந்துவிடும். காற்று இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. காற்று, உடம்புக்குத் தேவையான உணவுகளில் முதல் உணவு.
தண்ணீரோ, உண்ணும் உணவுகளோ இல்லாமல் பல நாள் இருக்கலாம். காற்று இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது.
உடம்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் காற்றில் இருக்கின்றன. காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்த சித்தர்கள், யோகிகள் இருந்ததுள்ளனர். அது அவர்கள் கற்ற, வாழும் கலை.
கல்வியோ, கற்கும் திறனோ இல்லாத நல்ல பாம்பு, இரை என எதுவும் தின்னாமல், காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு, ஆறு மாதத்துக்கும் மேலாக உயிரோடிக்கிறது.
ஆனால், மனிதர்கள் காற்றின் சிறப்பையும், காற்று எந்த அளவுக்கு உடம்புக்கு இன்கறியமையாதது என்பதையும் அறிந்துகொள்ளாமல், வறுமையினால், பசிக்கொடுமையினால், இறந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.
காற்றை சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால், நுரையீரல் நோய், மார்பு நோய், இருமல், செரியாமை போன்ற கொடிய நோய்கள் வருகின்றன. இந்நோயால் மாண்டுபோவோரின் எண்ணிக்கையோ, கோடிக்கும் மேல்.
தூய்மையான காற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தால் உடம்பு நீண்ட காலம் வாழ்ந்திருக்கும்.
உடம்புக்குத் தேவையான அளவு காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விடுகிறது நுரையீரல். வெளியில் இருக்கும் காற்று தூய்மையானதாக இருந்தால், நுரையீரல் முழு அளவு விரிந்து காற்றை இழுத்துக் கொள்ளும். காற்று தூய்மையில்லாமல், நச்சுத்தன்மை உடையதாக இருந்தால், நுரையீரல் விரிவதைக் குறைத்துக் கொள்ளும். அதனால், குறைவான காற்றே உள்ளுக்குள் செல்லும்.
தூய்மையான காற்றே இல்லாமல், நச்சுக் காற்று மட்டுமே கிடைக்கக் கூடிய பகுதிகளில் வாழுகின்ற மனிதர்கள், எந்த நேரமும் நச்சுக்காற்றையே உணவாக உட்கொள்வதனால், உடல் நலம் பாதிக்கிறது. உள்ளே சென்றுவிடும் நச்சுப் பொருள்கள் நோய்களை உற்பத்தி செய்கின்றன.
எனவே, வெளியிலிருந்து பெறப்படுகின்ற காற்று, மனித உடம்புக்கு அமிழ்தம் போன்றது என்பதை அறிய வேண்டும்.
ஒவ்வொரு பகுதிலும் வாழுகின்ற மனிதர்கள், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள காற்று தூய்மையானதா நஞ்சுடையதா என்பதைச் சிறிய சோதனையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு படி தண்ணீரில் சிறிது சுண்ணாம்பைக் கரைத்து தெளிய வைத்தால், சுண்ணாம்பெல்லாம் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். மேலே நிற்கும் தெளிந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு. மூக்கிலிருந்து வெளிவரும் காற்றை ஒரு சிறு குழாயின் வழியாகப் பாத்திரலிருக்கும் சுண்ணாம்பு நீரின் மேல் படும்படிச் செய்தால், சுண்ணாம்புத் தண்ணீரின் மேல் பாலேடு படர்ந்துபோலச் சுண்ணம்பு கட்டும்.
இப்படியே ஒருவர் வெளிவிடும் மூச்சுக்காற்றை அத்தண்ணீரின் மேல் படும்படிச் செய்து கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் ஒரு கட்டிச் சுண்ணாம்பு எடுக்கும் அளவுக்குத் தோன்றும். இதன் மூலம், மூச்சு விட்டவர் சுவாசித்த காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் பல நாட்கள் நச்சுக்காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர் சுவாசிக்கும் காற்றிலுள்ள நஞ்சு, நுரையீரலைப் பாதித்து, ரத்தத்தில் கலந்து இதயத்தைப் பாதித்து, தீராத நோய்க்குள் தள்ளிவிடும்.
எனவே, மனிதர்கள் வாழுமிடங்களில் தூய்மையான காற்று கிடைக்குமாறு இருக்க வேண்டும். வீடுகளில், போதிய அளவு சன்னல்கள் இருக்க வேண்டும். சன்னல்கள் இல்லாத வீடுகளில் பலர் சேர்ந்து இருக்கும்போது, தூய்மையான காற்றை சில மணி நேரங்களில் அனைவரும் சுவாசித்து விடுவர். அதன் பின்னர், அவரவர் சுவாசித்து வெளிவிட்ட நச்சுக்காற்றையே மீண்டும் சுவாசிக்க வேண்டியிருக்கும்.
அவ்வாறு சுவாசிக்கும்போது, நச்சுக்காற்று ரத்தத்தில் கலந்துவிடும். நுரையீரல் சுருங்கிவிடும். மூளையின் வலிமை குன்றிவிடும். அறிவு மழுங்கிவிடும்.
மூச்சுக்காற்றின் ஓட்டம் குறைந்தால், ஈளை, எலும்புருக்கி, நீரிழிவு முதலான நோய்கள் உருவாகும்.
எனவே, சன்னல் இல்லாத வீடுகள் இருந்தாலும் அதில் மனிதர்கள் வசிக்கக் கூடாது.
சன்னல்கள் இல்லாத வீட்டிலோ அறையிலோ தங்குவது தன்னைத்தானே கொன்று விடுவது போன்றதாகும். ஒருவரை சன்னல் இல்லாத அறைக்குள் விட்டு கதவை அடைத்துப் பூட்டிவிட்டால். சில மணி நேரத்திலேயே அறையிலுள்ள தூய காற்றையெல்லாம் இழுத்து சுவாசித்து விடுவார். அதன் பிறகு அறைமுழுவதும் நச்சுக் காற்று நிறைந்துவிடும்.
நச்சுக்காற்று வெளியே செல்ல வழி இல்லாததால் அறைக்குள்ளேயே இருக்கும். அறையில் விடப்பட்டவர் நச்சுக்காற்றையே சுவாசிப்பார். நச்சுக்காற்றைச் சுவாசிக்க நேரும்போதெல்லாம் நுரையீரல் சுருங்கும். நச்சுக்காற்றை மட்டுமே சுவாசிக்கின்றவரின் நுரையீரல் சுரங்கி, செயல்படாமல் நின்றுவிடும். மூச்சுத் திணறும். இறந்துவிடுவார்.
இதற்குப் பெயர் தற்கொலை தானே?
தூய்மையான காற்றைச் சுவாசித்து வெளியே விடுகின்ற நச்சுக்காற்று, பகலை விட இரவில் மிகுதியாகப் பரவும். பகல் வேளையில் புல், பூண்டு, மரம், செடி, கொடி போன்றவை நச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு, தூய்மையான காற்றை வெளியே விடுகின்றன. இரவில், அவை தூய்மையான காற்றை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு நச்சுக்காற்றை வெளியே விடுகின்றன.
ஆனால், மனிதர்கள் பகலிலும் இரவிலும் ஒரே மாதிரியே சுவாசிக்கின்றனர். மரம், செடி, கொடிகள் நிறைந்த நிலத்தில் வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இரவில் தூய்மையான காற்று கிடைப்பதே அரிதாகும்.
மரங்கள், செடி, கொடிகள், மனிதர்கள் என எல்லாமும் இரவில் நச்சுக்காற்றையே வெளியிடுவதால், நச்சுக்காற்றே எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
இரவு நேரங்களில் மரங்களுக்குக் கீழே தங்குவதும் படுப்பதும் கூடாது. ஏனென்றால் மரத்தினது அடியில் தூய காற்று கிடைக்காது.
வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால், பகலில் மட்டுமே பயன்படும். இரவு நேரத்தில் பயன்படாது. இரவு நேரத்தில் மரங்களின் கீழே படுப்பதும் நலம் தராது. துன்பும் தரும்.
இரவில் மரம் செடிகளிலிருந்து வெளிவருகின்ற நச்சுக் காற்று வீட்டுக்குள் நுழையும். ஆகையால், தூய்மையான காற்று வீட்டுக்குள் உலாவும்படி சன்னல்கள் இருக்க வேண்டும்.
அதேபோல், வீட்டுக்குள் நச்சுக்காற்றை அதிகப்படுத்துகின்ற பொருள்களை அகற்ற வேண்டும். உங்குவதற்கு முன், வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை நிறுத்த வேண்டும். விளக்குகள் எரிவதற்குத் தூய காற்று தேவை. தூய காற்றை உறிஞ்சி எரிகின்ற விளக்கு, நச்சுக்காற்றை வெளிப்படுத்தும்.
அதே போல், தலைமாட்டில் விளக்கு எரியக்கூடாது. மூச்சு, முகத்துக்கு அருகிலுள்ள காற்றை இழுக்கும். விளக்கு தலைமாட்டில் இருந்தால், தலைக்கு அருகில் நச்சுக்காற்றே இருக்கும்.
வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசுவது நல்லது. சுண்ணாம்பு நச்சுக்காற்றை உறிஞ்சிவிடும். சாக்கடைகளில் சுண்ணாம்பு நீரைத் தெளித்தால், அதிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றைச் சுண்ணாம்பு நீர் உறிந்து கொள்ளும். நச்சுக்காற்று தரை மட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். தூய்மையான காற்று தரை மட்டத்துக்கு மேலே உலவிக் கொண்டிருக்கும் என்பதனால், தரையில் படுத்து உறங்குவதை விடச் சாலச்சிறந்தது. கட்டிலின் மேல் படுப்பதாகும்.

மஞ்சள் காமாலை என்பது நோயா?

மஞ்சள் காமாலை என்பது நோயா?

காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.

எல்லாம் விதிப்பயன் என்று சொல்வதை விட, ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராயும்போது தான், எல்லா அறிகுறிகளும் ஒரே வகையான நோயை சார்ந்தது அல்ல என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். காமாலை என்பது நோயே அல்ல; உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்கள் அனைவருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. “புளோரசன்ட்’ விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும். கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும்போதும், தோலின் மேல் கெரோட்டின் படிந்து, சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும், தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. “பிலுருபின்’ என்ற நிறமி, கண் வெளிப்படலம் மற்றும் தோலில் படிந்து கறை ஏற்படும்போது தான், அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும். ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, “பிலுருபின்’ என்ற நிறமியும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும்போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல், அதிக வேலைப்பளுவால் திணறும். அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமான சில நோய்கள், மலேரியா, சில மருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட, சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள “அப்ளோடாக்சின்’ என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும். சில நேரங்களில், கல்லீரலே பாதிப்படைந்து, அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பாரம்பரிய காரணங்களால் இது போன்று ஏற்படலாம். எனினும், மிக குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்படும்; உயிருக்கு ஆபத்து இல்லை.

பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தாய்க்கும் -குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் இருத்தல் ஆகியவற்றால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.

ஹெப்பாடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ, ஹெர்பஸ், லெப்டோஸ்பைரோசிஸ், சைட்டோமெகாலோ வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் நாளங்களில் கல், புற்றுநோய், அடைப்பு உருவாகி தடை ஏற்படும்போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால், போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைபட்டு விடும். இதனால் பிரச்னை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது. ரத்தம் மற்றும் சிறுநீரை, அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும். இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். ஆனால், இதை வைத்து அற்புதம், அதிசய சிகிச்சை என விளம்பரப்படுத்துகின்றனர். ஹெப்பாடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாக்கக் கூடியவை. குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவதற்குள், ஹெப்பாடைட்டிஸ் பி தடுப்பூசி, மூன்று முறை போடப்படுகிறது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும், ஹெப்பாடைட்டிஸ் ஏ வகை நோய்க்கான தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஊசி போட தவறினால், வளர்ந்த பிறகு போட்டுக் கொள்ளலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் ஹெப்பாடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களை குணப்படுத்தி விடலாம். ஹெர்பஸ் தொற்று, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் சைட்டோமெகாலோ வைரஸ் நோய்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன. நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். மது அருந்தாமலிருந்து, நோயை குணப்படுத்தும் மருந்துகளை சரியாக சாப்பிடவில்லை எனில், மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமாகி விடும். அறுவை சிகிச்சை மூலம் சரியாகக் கூடிய நோய்களை, ஸ்கேன், லேப்பராஸ்கோபி செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையின் அடிப்படையில் சரியான சிகிச்சை அளிப்பது இந்நோய்க்கு அவசியம்.

வ‌யி‌று கோளாறு‌க்கு சோ‌ற்று‌க் க‌ற்றாழை

வ‌யி‌று கோளாறு‌க்கு சோ‌ற்று‌க் க‌ற்றாழை

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்:-

உடல் பருமன் குறைய... 

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்­ரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும். 

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

கணைச் சூடு குறைய...

கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும். 

வலுவான பற்கள் 

வேப்பங்குச்சியினால் பல் துஇலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும். 

உடல் சூடு

ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

கற்கண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்... 

கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

கக்குவான் இருமல் 

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். 

உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும். 

இரத்த சோகை

இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.
ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

நரம்பு சுண்டி இழுத்தால்... 

ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.
நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது. 

பல்லில் புழுக்கள் 

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

கருமையாக தலைமுடி வளர இயற்க்கை மருத்துவம்

கருமையாக தலைமுடி வளர இயற்க்கை மருத்துவம்:-

ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி கருப்பாக வளர

உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு................




சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ. 

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். 

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள். 

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும். 

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள். 

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள். 

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது 

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம். 

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும். 

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள். 

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம். 

14. நேரத்திற்கு தூங்குங்கள். 

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள். 

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள். 

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது. 

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது. 

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. 

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். 

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். 

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள். 

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்

எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:-

 

 
 
பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு.

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற.

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க.

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக.

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

இதயத்தை காக்கும் சீத்தா பழம்


இதயத்தை காக்கும் சீத்தா பழம்

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி யை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. 

முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் முடியை பாதுகாக்கலாம் ஏனெனில் முடியை பாதுகாக்கும் வைட்டமின் ஏ வை கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் இதை தலைமுடிக்கான எண்ணெய்யாக உபயோகிக்கின்றனர். சீத்தாபழம் கண் பார்வைக்கும் செரிமாண பிரச்சனைக்கும் சிறந்தது. சீத்தாபழ மரத்தின் பட்டை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கை நிறுத்துவதற்கும் மரத்தின் இலைகள் நீரிழிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுகின்றது..

சீத்தாபழம் எவற்றையெல்லாம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது என பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் உள்ளவர்கள் சீத்தாபழம் சாப்பிடலாம். மேலும் கண்பார்வைக்கு, செரிமான பிரச்சனைக்கு, ஆரோக்கியமான இதயத்திற்கு, கீல்வாதம், ரெய்மடிஸ்ம் சிகிச்சைக்கு, சோர்வுடன் போராடும், இரத்தசோகைக்கு, புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கு உதவிபுரிகிறது.

பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள சீத்தாபழம் பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய்க்கு மருத்துவத்தில் உதவுகிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம். நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. இது மூட்டுகளில் இருந்து பல்வேறு அமிலங்களை அகற்றி மூட்டுகளில் ஏற்படும் வாதநோய், கீழ்வாதநோய், மூட்டுவலி, ஆகியவற்றை குறைக்கிறது. இரத்தசோகை உள்ளவர்கள் சீத்தாபழத்தை சாப்பிட்டால் விரைவான தீர்வு பெறலாம். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம். சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது.

குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாமே


குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாமே!

இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துகின்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது குளிர்ந்த நீரை தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்

இதயத்தை காக்கும் உணவு பட்டியல்


இதயத்தை காக்கும் உணவு பட்டியல் ..

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும் கொழுப்பை குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது. நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.

சல்மான் மீன் மற்றும் சூரை: இவ்விரு மீன்களும் இதயத்தின் முக்கிய வேட்பாளராக பணிபுரியும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் ஒமேகா 3யை வளமான அளவில் கொண்டுள்ளது. அதனால் சல்மான் மற்றும் சூரை மீன்கள் உணவில் எடுத்துக்கொண்டால் இதயத்தை பாதுகாக்கலாம்.

அக்ரூட் பருப்புகள்: இதயத்தை பாதுகக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. தினமும் சிறிதளவு அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை குறைந்து தமனிகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் சரிசெய்ய உதவுகிறது. மதிய உணவுக்கு பின் சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.

ஆரஞ்சு: இது கொழுப்புக்கு எதிராக போராடக்கூடிய பெக்டின் கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற ஹெஸ்பெரிடின் குறைந்த இரத்த அழுத்தம் உதவுகின்றது.

கேரட்: இனிப்பு கேரட் நீரிழிவை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது என்றாலும் கேரட்டில் உள்ள இனிப்பு மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இவை கெட்ட கொழுப்புக்களை அளிப்பதற்கும் உதவிபுரிகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு: சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் கி நிறைந்து காணப்படுகிறது. வெள்ளை நிறமான ஃபைபர் மற்றும் லைகோபீன் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குகிறது.

ஓட்ஸ்: ஓட்ஸ் அனைத்து வடிவத்திலும் காணப்படும் கொழுப்புகளை குறைத்து உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆளி விதை: நார், பைத்தோகெமிக்கல்ஸ் கிலிகி ஆகியவற்றின் கலவையே ஆளி விதை. இந்த மூன்று பொருட்களும் உடல்நலத்திற்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதை தினமும் தானிய வகைகளுடன் கலந்தோ அல்லது பச்சைகாய்கறி கலவைகளுடன் கலந்தோ ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.

மிளகாய் தூள்: இது நம்புவதற்கு கடினமானது என்றாலும் இந்தியாவில் உள்ள சுவைமிக்க மசாலா இதயத்தை பாதுகாப்பதோடு உடலில் உள்ள இன்சூலின் மற்றும் நீரிழிவையும் கட்டுபடுத்துகிறது.

காபி: இதை நீரிழிவு2 வகை நோயாளிகள் தவிர்க்க வேண்டியது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.