கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன்

ஒரு ஊரு இருந்துச்சு அந்த ஊருல எல்லோரும் உழவர்கள்தான் அது வாணம் பாத்த பூமி அதாங்க மழைபெஞ்சாத்தான் பயிர்செய்யமுடியும் அந்த வருஷம் எல்லோரும் வயல்ல ஏர் ஓட்டி பயிர்செய்ய தயார்செஞ்சு வைச்சுருந்தாங்க ஆனா பாருங்க மழையே வரலை அதனால யாரும் பயிர்செய்ய முடியல அடுத்த வருஷமும் அதேபோல ஏர்ஓட்டி தயாரா இருந்தும் மழைவரல இப்படியே 16 வருஷம் ஆச்சுங்க மழைமட்டும் பெய்யவே இல்லை அதனால இனிமே எங்க மழைவரபோகுதுன்னு யாரும் ஏர்ஓட்டறது இல்லைங்க கடும் பஞ்சம் வேற வந்துருச்சு ஆனாலும் ஒருத்தருமட்டும் வருஷா வருஷம் தவறாம ஏர்ஓட்டுவாரு இந்த 16வது வருஷமும் இவரு ஏர் ஓட்றத பார்த்த இன்னொருத்தர் எந்த நம்பிக்கைல ஏர் ஓட்டறிங்கன்னு கேட்டாராம்

அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்

இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்

ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.

இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்

நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.

No comments: