“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம்

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன்
என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த
செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க
பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம்
குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக
ரட்சித்த குபேரன்தான் பெருமாளின்
குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட
பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம்
தேவைப்பட்டது. அப்பொழுது
பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர்
ஸ்ரீ வராகப்பெருமாள்…
அதானால் பன்றியாகிய ஸ்ரீ
வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி,
குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில்
ஆகி மக்களுக்கு அருள்புரிந்து
அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்)
சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை
வென்றாராம் பெருமாள். இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல்
ஏறி நின்றால் வென்றிடலாம்
குலசேகரனை…” என்ற விடுகதைக்கான
விளக்கம்.

No comments: