“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”

இதற்கும் புராணத்தை வைத்து
விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்ன
ு நினைக்கிறேன்(!).
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல்
வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை
எதற்காக போடுகிறோம்? நெஞ்சை
மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை
போடுவது என்றால் தானம் கொடுக்க
நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது,
அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது
என்று பொருள் சரிதான்...??
நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத
யாகம் செய்துவிட்டு நூறாவது
அசுவமேத யாகம் செய்யும்போது
பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து
அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால்
சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை
வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி
கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு
அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம்
குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து
கமண்டலத்தின் குழாயை குத்தி
சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி
விடுமாறு செய்கிறார்.
இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…"
என்பதற்கான சிறந்த விளக்கம்…..

No comments: