புது குறள்

 பணமிலார்எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...

அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை...

முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

CHAT எனில் YAHOO-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

கடி ஜோக்ஸ்

ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா

           அவன் `பொடி`ப்பையனாம்

    ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்

          அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
          அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
           ?
           ?
            MI CROW SOFT


    படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?

         அதுதான் `மசாலா` படமாச்சே...

    அந்த பாம்புக்கு என்ன நோயாம்?

           வேறென்ன புற்று நோயாம்

    மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது


    பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …


    ““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”


    "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"

          "அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"

    கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!


    "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"

          "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

    "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"

          "அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"


    கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?

          மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

    தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது


    நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,

          அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?


    பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே


    ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!


    வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்?   மேஜர் சுந்தர்ராஜன்


    நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

          சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து                   வாங்கியிருக்கணும்



    லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்

          ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
          இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....


    ஒரு யானை வேகமா ஓடிச்சாம் அங்க போய்

          என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும் .

மொக்கை தத்துவங்கள் ...

   வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

    பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!  பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…

    வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.

    நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…

    ஆசை படுவதை மறந்து விடு!ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

    தூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…

    ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......

    சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.

    குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

    ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.

    தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்

    ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
    காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

    டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.
    தினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;
    ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....
    குக்கர் விசிலடிச்சு  பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?

    என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?

    காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..

    Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

    பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

    பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.

மொக்கை

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் :-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-)

போஸ்டரில் இன்று 26012013

இந்த தொகுப்பில் நான்  ஊரை சுற்றி ஒட்ட பட்ட போஸ்ட்ர்க்ளை புகைப்படம் எடுக்க உள்ளேன்...........

 இதன் நோக்கம்:

சோழவந்தானில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷங்கள்  பற்றிய அனைத்தையும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே..........






MVM Theater la kanna laddu thinna aasaiya ooduthunkooooooo
Idam: Sholavandan naal:26/01/2012