அன்பு

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”

இதற்கும் புராணத்தை வைத்து
விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்ன
ு நினைக்கிறேன்(!).
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல்
வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை
எதற்காக போடுகிறோம்? நெஞ்சை
மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை
போடுவது என்றால் தானம் கொடுக்க
நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது,
அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது
என்று பொருள் சரிதான்...??
நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத
யாகம் செய்துவிட்டு நூறாவது
அசுவமேத யாகம் செய்யும்போது
பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து
அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால்
சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை
வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி
கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு
அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம்
குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து
கமண்டலத்தின் குழாயை குத்தி
சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி
விடுமாறு செய்கிறார்.
இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…"
என்பதற்கான சிறந்த விளக்கம்…..

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம்

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன்
என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த
செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க
பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம்
குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக
ரட்சித்த குபேரன்தான் பெருமாளின்
குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட
பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம்
தேவைப்பட்டது. அப்பொழுது
பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர்
ஸ்ரீ வராகப்பெருமாள்…
அதானால் பன்றியாகிய ஸ்ரீ
வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி,
குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில்
ஆகி மக்களுக்கு அருள்புரிந்து
அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்)
சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை
வென்றாராம் பெருமாள். இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல்
ஏறி நின்றால் வென்றிடலாம்
குலசேகரனை…” என்ற விடுகதைக்கான
விளக்கம்.

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
 சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
 மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
 வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும். இது இந்து மதத்தின் உண்மை.

டூத் பேஸ்ட்

பேஸ்ட்டில் என்னென்ன கலக்கப்பட்டிருக்கிறது? சோடியம் லாரைல் சல்பேட், சோடியம் சாக்ரின், ஹைட்ரேட்டட் சிலிகா, சோடியம் ஹைட்ராக்சைடு, ஜிங்க் சல்பேட், சோடியம் ஃபுளூரைடு, ஃபார்மால்டிஹைட், ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்... அப்புறம் சில எண் குறியீடுகள். இதில் ‘ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்’ என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் மூலிகைகளா என்ன?

மேற்கண்ட ரசாயனப் பொருட்கள் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகின்றன தெரியுமா? நாம் பயன்படுத்துகிற பேஸ்ட் பற்களோடு உராய்வை ஏற்படுத்துவதற்காக கால்சியம் கார்பனேட் அல்லது சிலிகா போன்ற ரசாயனப் பொருட்கள்; லேசான இனிப்பைத் தருவதற்காக சாக்ரின் சேர்க்கிறார்கள். அந்தக் காலத்தில் சாதாரண பெட்டிக் கடைகளில் விற்கும் மிட்டாய்களிலும்,குளிர்பானங்களிலும் செயற்கை இனிப்பைத் தரும் சாக்ரின் கலக்கப்பட்டிருந்தால் ‘அது உடல்நலத்தைக் கெடுக்கும்’ என்று தவிர்த்து விடுவார்கள். சர்க்கரையோடு இதை சேர்த்துக் கலந்ததற்காக சில டீக்கடைகளையே புறக்கணித்த மக்கள் உண்டு. அதே சாக்ரின்தான் நம்முடைய பேஸ்ட்டுகளில் கலக்கப்படும் சோடியம் சாக்ரின். நுரையைத் தருவதற்காக ஃபோமிங் ஏஜென்ட்களும், ஃபுளூரைடுகளும் கலக்கப்படுகின்றன.

 

S0sSork.jpg


இவ்வளவு ரசாயனங்களைக் கொண்ட ஒரு பேஸ்ட்டைத்தான் நாம் ஹெர்பல் பேஸ்ட் என்ற சொல்லால் அழைக்கிறோம். சாதாரண பேஸ்ட்டுகளுக்கும், ஹெர்பல் பேஸ்ட்டுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... 2.5% முதல் 5% அளவு வரை ஏதாவது ஒரு மூலிகைப் பொருளைக் கலப்பது மட்டும்தான் அந்த வேறுபாடு. 95% முதல் 97.5% வரை இரண்டு பேஸ்ட்டுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நம் நாட்டில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஹெர்பல் பேஸ்ட்டுகளின் எண்ணிக்கை பத்து. இதில் ஃபுளூரைடு கலந்த பேஸ்ட்டுகள் நான்கு. ஃபுளூரைடிற்குப் பதில், அதே விளைவைத் தரும் வேறு ரசாயனப் பொருள் உள்ள பேஸ்ட்டுகள் மூன்று. இந்த இரண்டு வகைகளிலும் அடங்காத, மூலப்பொருட்கள் என்னவென்று குறிப்பிடப்படாத பேஸ்ட்டுகள் மூன்று.

ஹெர்பல் பேஸ்ட்டுகளுக்கும், சாதாரண பேஸ்ட்டுகளுக்கும் இதையெல்லாம் கடந்த ஒரு ஒற்றுமை உண்டு... அந்த ஒற்றுமை, எஸ்.எல்.எஸ். என்று அழைக்கப்படும் சோடியம் லாரைல் சல்பேட்தான். எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் சரி... அழுக்குநீக்கியாகப் பயன்படும் எஸ்.எல்.எஸ். இல்லாமல் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதே இல்லை.

நம்ம ஊர் மெக்கானிக் ஷெட்களில் தரையில் படிந்திருக்கும் அழுக்குகளையும், கிரீஸையும் போக்குவதற்காக, இரவில் கடைசியாக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துவார்கள். பளிச்சென தரை சுத்தமாகிவிடும். கார், டூ வீலர் உதிரிப் பாகங்களையும் இதே ரசாயனத்தால் கழுவும்போது விடாது ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகள் போய்விடும். அந்த அளவிற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம், அரிக்கும் தன்மை கொண்ட அழுக்கு நீக்கி. அந்த ரசாயனத்தின் பெயர்தான் எஸ்.எல்.எஸ். எனப்படும் சோடியம் லாரைல் சல்பேட்.

நாம் பயன்படுத்தும் எல்லா பேஸ்ட்டுகளிலும் இந்த அழுக்கு நீக்கி பயன்படுகிறது. நாம் நம்முடைய பற்களை தினமும் இந்த ரசாயனம் கொண்டுதான் கழுவுகிறோம். ஹெர்பல் பேஸ்ட்டுகளிலும் ரசாயனங்களோடு, ரசாயனமாக எஸ்.எல்.எஸ். கலந்திருக்கிறது.உணவுகளைப் பற்றிப் பேசும்போது எதற்கு டூத்பேஸ்ட்டுகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது? காரணங்கள் இருக்கின்றன! உணவுகளில் கலந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பேசலாம். ஆனால் அதைத் தாண்டிய ஒரு ஆபத்து, டூத் பேஸ்ட் விஷயத்தில் இருக்கிறது!

உதாரணமாக ஐஸ்க்ரீம் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், அது நம் தினசரி உணவு இல்லை. எப்போதாவது விருப்பப்படும்போதோ, விருந்துகளின்போதோ மட்டுமே சாப்பிடுவோம். ரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தாலும் கூட, மிக அரிதாகப் பயன்படுத்தும் பொருட்களால் உடல் அதிகம் பாதிப்படைவதில்லை. ஏனென்றால், உடலின் எதிர்ப்பு சக்தி தேவையற்ற ரசாயனப் பொருட்களை எதிர்த்து வெளியேற்றி விடும்.

ஆனால் சிறிய அளவில் உடலை பாதிக்கும் ரசாயனம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள உணவில் இருந்தால் கூட ஆபத்து. அது தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்ந்து, நம் உடலை விஷத்தின் கருவறை ஆக்கிவிடும். அதன் பாதிப்பு வெளிப்படும்போது மிகப்பெரியதாக இருக்கும். இப்படியான அன்றாட உணவுகளைப் போலவே டூத் பேஸ்ட்டில் உள்ள ரசாயனங்களும் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அன்றாட உணவை விட அதிகப் பயன்பாட்டில் உள்ள ஒரு பொருள்தான் பேஸ்ட்.

சாதாரணமாக தினமும் ஒரு முறையாவது பல் துலக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம். சில தீவிர பாதுகாப்புணர்வு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை கூட பல் துலக்குகிறார்கள். ஒரு நாளைக்கு இரு முறை என்று தினமும் பல்துலக்கும்போது நம் உடலில் சேரும் ஃபுளூரைடு, எஸ்.எல்.எஸ். போன்ற ரசாயனங்களின் பாதிப்பு மிகப் பெரியது.

பேஸ்ட்டுகளில் இன்னொரு அதிர்ச்சியான கலப்படத்தை 2011ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இயங்கும், அரசுக்குச் சொந்தமான டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (DIPSAR) என்ற நிறுவனம் கண்டுபிடித்தது. நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான பேஸ்ட்டுகளில், மூலப்பொருட்கள் பட்டியலில் குறிப்பிடப்படாத பொருள் ஒன்றும் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா? ‘சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும்’ என்று நாம் அறிந்திருக்கிறோம். அந்த புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று, நிகோடின். இந்த நிகோடின்தான் நம் பேஸ்ட்டுகளில் கலந்திருக்கிறது.

குறிப்பாக ‘மூலிகை தயாரிப்புகள்’ என பெருமிதத்தோடு விற்கப்படும் பேஸ்ட்டுகள் மற்றும் பல்பொடிகளில்தான் நிகோடின் அதிகம் உள்ளது. ஒன்பது சிகரெட்டுகளை புகைப்பதால் உடலுக்குள் செல்லும் நிகோடினைவிட குறிப்பிட்ட ஒரு பிராண்டின் ஹெர்பல் டூத்பேஸ்ட்டை உபயோகித்தால் அதிகம் நிகோடின் நம் உடலுக்குள் செல்கிறது.

டூத் பேஸ்ட் மற்றும் பல்பொடிகளில் நிகோடின் கலப்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூடத்தால் வெளியிடப்பட்ட இந்த பட்டியல் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவரவில்லை. இணையதளங்களில் தேடினால் எந்தெந்த நிறுவனத்தின் பேஸ்ட்டில் என்ன அளவில் நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்படியானால், எந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி பல் துலக்குவது என்று நீங்கள் மறுபடியும் கேட்பீர்களானால், இதே கட்டுரையை மறுபடியும் ஒரு முறை முழுமையாக வாசியுங்கள். எந்த பேஸ்ட்டையுமே பல் துலக்குவதற்கு என்னால் பரிந்துரைக்க முடியாது. காரணம், அதன் ரசாயனக் கலப்பு.அப்படியென்றால் பல் துலக்க என்ன செய்வது? புற்றுநோய்க்கான காரணிகளில் ஒன்று, நிகோடின். இந்த நிகோடின்தான் நம் டூத்பேஸ்ட்டுகளில் கலந்திருக்கிறது!