புது குறள்

 பணமிலார்எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...

அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை...

முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

CHAT எனில் YAHOO-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

No comments: