புள்ளி ராஜா M.B.B.S


    நோயாளி: வயிறு எரியுது  டாக்டர்..

         டாக்டர்: நான் இன்னும் பீஸ் எவ்வளவுன்னு சொல்லவே                                       இல்லியே?...

    பல் டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."

          மற்றவன்: "ஏன் என்னாச்சு."
          பல் டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக்                                       கொடுக்கிறாரு..."

    நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!

          டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே!                   போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

    நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

          டாக்டர் : ஆமாம் ,
          நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
          டாக்டர் : ?????

    நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

          டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..

    அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?

          "அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".

    நோயாளி : வயிறு எரியுது டாக்டர்

          டாக்டர் :எப்போதிலிருந்து?
          நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப்                               பேசினதை  பார்த்ததிலிருந்து டாக்டர்.

    என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!


    ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு

          அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!

    பேஷண்டுக்குத்தான் தூக்கத்துல நடக்கிற வியாதி. . . சரி நர்ஸ் ஏன்

          பின்னாலேயே நடக்கிறாங்க..?
         அவங்களுக்கு தூக்கத்துலேயே கண்காணிக்கற வியாதியாம் ..!

    நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.

           டாக்டர்: (வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு) அப்படியா... எனக்கு                            ஒண்ணும் கேட்கலியே...
           நோயாளி: ஒருவேளை சிக்னல்ல நிக்குதோ!


    அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

          ஒரு பேஷண்டுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்புன்னதும்  உடைக்க கடப்பாரை               தேடுறாரு!

    நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

          நபர் : ஏன்?
          நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

    டாக்டர் மு.முத்தண்ணா : "சோமு...... நீ....ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி

          கொண்டு வந்திருந்தா, பிழைக்கவெச்சிருக்கலாமே!"
          சோமு : "என்ன டாக்டர் ஸார் நீங்க.....என் மாமா விஷம் குடிச்சே பத்து
          நிமிஷம் தான் ஆகுது...."

    நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது.

          கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?

No comments: