சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....


இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல

No comments: